Monday, July 11, 2011

கூக்குரல்

அம்மா வரும்வரை-
மரத்தை வெட்டாதீர்!
கூக்குரல் இட்டது!
குஞ்சுக் குருவி.

வியப்பு

புரியாவிட்டாலும்
வியந்து போனதாய்
காட்டிக்
கொள்கிறேன்
குழந்தைகள் காதில்
சொன்ன ரகசியத்தை!

தேன்கூடு.....

நீ "சக்கரைகட்டி" என
நினைத்து
கரைக்க முயன்று...,
நேற்றெல்லாம்
பெய்த மழை
கடைசியில்
ஒப்புக்கொண்டது...
நீ சக்கரைகட்டி அல்ல...
"தேன்கூடு"...என்று..?!

முகம்!

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து 
போகிறது,
அம்மாவின் முகம்!

முகம்!

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து 
போகிறது,
அம்மாவின் முகம்!

நேரம் நல்ல நேரம்!

எந்த ஒரு நல்ல காரியத்தையும்
செய்வதற்கு
ராகு காலம் பார்க்க
வேண்டியதில்லையே....
நாளும் கிழமையும் பார்த்துக்
கொண்டு
நோயும் தீர்வும்
வருவதில்லையே...
மற்றோருக்கு மகிழ்ச்சி
தர வழிகளைத் தேடு...
சந்தோசம் உன்
முகவரிகளை
விசாரிக்கும்....

காலத்தின் கோலம்!

மழை இல்லாத
மாநகரத்தில்
விவசாயம் இல்லை.
ஆனால்
விளைச்சலோ அமோகம்...
அடுக்குமாடி வீடுகள்!