Thursday, June 30, 2011

பள்ளிக்கூடம்


வயித்துப் பிழைப்புக்காக
கயித்து மேலே நடக்கிறேன்
சுத்தி நின்ன
வேடிக்கை பார்க்கும் கூட்டம்
ஒத்த ரூபா போட
ஒருத்தரும் இல்ல..
நெலத்து மேல நின்னா
நெல நடுக்கம்..
கயித்து மேல நடக்கலனா
வயித்த பிடிக்கும்.
என்ன பார்க்கிறப்போ
தன் பிள்ளைய பார்ப்பதா நெனப்பாங்க
என்ன வளர்க்கவும்
எத்தனையோ பேர் கேப்பாங்க...
அப்பாம்மா நாடோடி..
தம்பி தங்கச்சியோடு
நானும் தெருக்கோடி...
பள்ளிக்கூடம் பக்கம் தான்
எங்க கூத்து
வாத்தியார் நடத்துற பாடம்
கேக்குது காத்துல...
பள்ளிக்கூடம் தொறந்தாதான்
எங்க பொழப்பு...
பாடம் படிக்க முடியாம
தவிக்குது மனசு....
என்பேரு
எழுதிப்பார்க்கும் ஆச மட்டும்
கொறையல...

No comments:

Post a Comment