Thursday, June 30, 2011

இன்னொரு அநாதை


பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.
ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.
எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.

No comments:

Post a Comment