Thursday, June 30, 2011

எது திருமணம்?


இருட்டில் நடக்கும் நாடகமா?                
இதயங்கள் பேசும் தேன் ரகமா?
தோரணை போடும் யாழ் இசையா?             
தேடல்கள் முடியாத பேராசையா?                  
                      
விருந்துகள் போட்டியிடும் வசந்த கானமா?                  
வீழ்வுகளை கடந்து வரும் போர்க்களமா?
   
சங்கதிகள் பெருக்கும் சங்கீதமா?                  
சந்தோசம் நிலைக்கும் சுபராகமா?
 
மோகம் தொடரும் மேளதாளமா?                     
மோதல்கள் இருக்கும் மத்தளமா?
 
வாதம் முடியாத பட்டிமன்றமா?              
வேதம் சொல்லும் பண்பாட்டா?
மஞ்சள் கயிறை புனிதமாக்கும் வினோதமா? 
மஞ்சத்தில் ஒருவரையொருவர் மன்றாடும் மகாசபையா?
உறவுகள் வரவழைக்கும் உற்சாகமா?
பிரிவுகளை பார்க்க போகும் பந்தயமா?
வரதட்சணை பேசப்படும் வியாபாரமா? 
விவாகரத்தை தூண்டும் அடித்தளமா?
இதில், திருமணம் சொல்வது எத்தனை?
அறிய செய்ய வேண்டும் சிந்தனை!
இதை அறிந்து விட்டால்,        
சொந்தங்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்      
சொர்க்கம் ஆகும்.

No comments:

Post a Comment