மூன்று நாட்களாக
சிந்திய கண்ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.
சிந்திய கண்ணீர் நின்றதும்
சிந்தனை தலைதூக்கியது
வாழ்வை வெறுத்த மனிதமே
வாழ்க்கை இதோ உன் கண்முன்னே என்றது.
சுற்றி சுற்றி பார்த்தேன்
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.
எதுவும் தென்படவில்லை
மீண்டும் சோர்ந்துவிட்டேன்,
உறங்கிக்கொண்டிருந்த மனதை
தட்டி எழுப்பியது மனசாட்சி,
நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து
உலகத்தை பார்
உனக்கெதிராக எதாவது
செயல்படுகிறதா என்று.
என் பாதங்களுக்கு அருகே இருந்த
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.
எறும்புகள் சுறு சுறுப்பாய் உழைத்துக்கொண்டிருக்க,
பட்டாம்பூச்சிகள் எல்லாம்
மின்னலைவிட வேகமாய் பறந்துக்கொண்டிருக்க,
எனக்கு நிழலை தந்த
கொய்யா மரத்திலிருந்த ஒரு பழத்தை
அணில் கொஞ்சம் கடிக்க,
பச்சைக்கிளி கொஞ்சம் கடிக்க
விட்டுச்சென்ற மீதியை தின்ன
இன்னொரு பறவை வந்தது
பதுக்கல் இல்லாத இந்த வாழ்வை கண்டு
பரவசம் கொண்டேன்.
பச்சை பாம்பு
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.
ஒரு கொடியில் படுத்துறங்க
பக்கத்திலே ஒரு ஓணான்
தலைதூக்கி பார்த்துக்கொண்டிருக்க,
நான்கு சிட்டுக்குருவிகள்
அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தன
சிறிது நேரத்தில்
மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த
கழுகை பார்த்தவுடன்
எதிரி வந்துவிட்டான் என்று
சண்டைபோட எவையும் தயாராகவில்லை
மாறாக
அதன் அதன் வழியில்
அமைதியாக விலகி சென்றுவிட்டன.
இந்த காட்சிகளை கண்டபொழுது
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.
ஒரு பல்கலைக்கழகத்தை நான் கண்டேன்
கற்றேன் வாழ்க்கை கல்வியை.

No comments:
Post a Comment